Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | பாடச் சுருக்கம் - பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள்

வரலாறு - பாடச் சுருக்கம் - பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள் | 11th History : Chapter 11 : Later Cholas and Pandyas

11 வது வகுப்பு வரலாறு : அலகு 11 : பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள்

பாடச் சுருக்கம் - பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள்

சோழரின் ஆட்சி விஜயலாய சோழன் (850-871) மூலம் புத்துயிர்ப்பு பெற்று முதலாம் பராந்தக சோழன் (907-955) மூலம் வலிமையூட்டப்பட்டது.

பாடச் சுருக்கம்

I சோழர்

சோழரின் ஆட்சி விஜயலாய சோழன் (850-871) மூலம் புத்துயிர்ப்பு பெற்று முதலாம் பராந்தக சோழன் (907-955) மூலம் வலிமையூட்டப்பட்டது.

முதலாம் இராஜராஜன்(985-1014) சோழப் பேரரசை உருவாக்கினார். சோழ அரச மரபுக்குப் பெருமையும் புகழும் சேரும் விதத்தில் தஞ்சாவூரில் பிரகதீசுவரர் (பெருவுடையார்) கோவிலைக் கட்டினார்.

முதலாம் இராஜேந்திரன் கடல் கடந்த படையெடுப்புகள் மூலம் கடாரம் முதல் ஸ்ரீ விஜயா வரை ஆட்சிப்பகுதியை மேலும் விரிவாக்கினார். அவர் வடஇந்தியா மீது படையெடுத்துச் சென்றதில் கிடைத்த வெற்றிகளின் நினைவாகக் கங்கை கொண்ட சோழபுரத்தில் கோவிலைக் கட்டினார்.

சோழர் ஏரி, கால்வாய் பாசன அமைப்புகளை உருவாக்கியதால் வேளாண்மையிலும் வணிகத்திலும் பெரும் வளர்ச்சி ஏற்பட்டது.

கோவில்கள் சமூக மையங்களாக மாறியதால் கலை, கல்வி போன்ற செயல்பாடுகளுக்கு ஆதரவு பெருகின.

அரசர்களால் கட்டப்பட்ட தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் ஆகிய கோவில்கள் கட்டுமானக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, சிலைவடித்தல் ஆகியவற்றில் சோழர் அடைந்திருந்த முழுமையான வளர்ச்சிகளுக்கு எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன

கடல்வழி வணிகம் செழித்தது. சந்தனக்கட்டை, கருங்காலி, சுவையூட்டும் பொருள்கள், விலை உயர்ந்த கற்கள், மிளகு, எண்ணெய், நெல், தானியங்கள், உப்பு ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டன. கற்பூரம், செம்பு, தகரம் மற்றும் பாதரசம் போன்றவை முக்கியமான இறக்குமதிப் பொருள்களாகும்

II பாண்டியர்

களப்பிரர்களுக்குப் பிறகு, பாண்டியர் ஏறத்தாழ பொ.. 6ஆம் நூற்றாண்டில் தங்கள் அரச மரபை நிறுவினர்.

சோழரின் வீழ்ச்சிக்குப் பிறகு, 13ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த பாண்டிய அரச மரபின் புத்துயிர்ப்பால் தமிழகம் மீண்டும் ஒளி பெற்றது.

பாண்டியர் குடவரைக் கோவில்களையும் கட்டமைப்புடன் கூடிய கோவில்களையும் கட்டினார்கள்.

மார்க்கோ போலோ மற்றும் அரபிய பயணிகள் கூற்றுப்படி, துறைமுக நகரமான காயல் வணிகம், பண்டமாற்று ஆகியவற்றுக்கான மையமாக விளங்கியுள்ளது.

Tags : History வரலாறு.
11th History : Chapter 11 : Later Cholas and Pandyas : Summary - Later Cholas and Pandyas History in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 11 : பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள் : பாடச் சுருக்கம் - பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள் - வரலாறு : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 11 : பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள்